இந்தி: கருணாநிதிக்கு நெஞ்சு பொறுக்கவில்லை
சென்னை:
1938ம் ஆண்டு முதல் கடந்த 66 ஆண்டுகளாக தமிழ் மொழி காத்திடும் சிப்பாயாக விளங்கும் திமுக, இந்தியைத்திணிக்க முயல்வதாக முதல்வர் ஜெயலலிதா கூறுவதைப் பொறுக்க முடியவில்லை என்று கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய சாலை காங்கிரஸ் என்ற அமைப்புதான் தேசிய நெடுஞ்சாலைகளில்வைக்கப்டும் கிலோமீட்டர் கற்களில் இந்தியில் பெயர் எழுத உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலையிட்டு தமிழகத்தில் தமிழிலும் பெயர்களை இடம் பெறச் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதன்படி தமிழிலிலும் பெயர்கள் இடம் பெற்று வருகின்றன.
இந்தப் பிரச்சினை தொடர்பாக கடந்த 2003ம் ஆண்டே, திமுகவைச் சேர்ந்த எம்.பிக்கள் மத்திய அமைச்சர்பி.சி.கந்தூரியைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். நானும் ஒரு மாத ஏட்டில் எழுதிய கட்டுரையில்,கிலோமீட்டர் கற்களில் இந்தியில் பெயர் எழுதுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்.
கடந்த 1938ம் ஆண்டு முதல் 66 ஆண்டுகளாக இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து திமுகவைச் சேர்ந்தபல்லாயிரக்கணக்கானோர் சிறை சென்றுள்ளனர், பல நூறு பேர் மாண்டுள்ளனர். தமிழக் காக்கும் சிப்பாயாக திமுகவிளங்கி வருகிறது.
அப்படிப்பட்ட திமுகவை, இந்தியைத் திணிக்க முயற்சிக்கிறது என்று வசை பாடுவதைப் பார்க்கும்போது, நெஞ்சுபொறுக்குதில்லையே என்று பாரதி பாடிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது என்று கூறியுள்ளார் அவர்.