For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜக்குபாய் கதை விவாதம் திடீர் நிறுத்தம்: வெளியூர் கிளம்பும் ரஜினி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ரஜினி தனது அடுத்த படமான ஜக்குபாயின் கதை விவாதத்தை திடீரென நிறுத்திவிட்டு ஹைதராபாத்துக்குச்சென்றுவிட்டார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் மூலம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், நடிகர் ரஜினிகாந்த்திற்கும் இடையே நடந்துவந்த நிழல் யுத்தத்தின் முதல் சுற்றில் ராமதாஸ் வெற்றி பெற்றுள்ளார்.

பாபா படத்தில் ஆரம்பித்த பிரச்சினை பெரிதாகி பாமக போட்டியிடும் 6 தொகுதிகளிலும் அந்தக் கட்சியைத் தோற்கடிக்க சபதம்பூண்டார் ரஜினிகாந்த். தனது ரசிகர்களையும் அந்தத் தொகுதிகளில் களம் இறக்கி விட்டார்.

அத்தோடு நிருபர்களை அழைத்து பா.ஜ.க-அதிமுகவை ஆதரிப்பதாக மனம் திறந்தார். அப்போது வன்னியர்களிடம் நியாயம்கேட்பது போல உருக்கமாக பேட்டி அளித்தார். ரஜினியின் பேட்டியால் பாமக வேட்பாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம்என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஓட்டு போட்டுவிட்டு வந்த ரஜினி, இரட்டை இலைக்கு வாக்களித்தேன் என்றார். ஆனால் தேர்தல் முடிவுகள் ரஜினிக்கு பெரும்அதிர்ச்சியைத் தந்துள்ளன. பாமக போட்டியிட்ட 6 இடங்களிலும் பெரும் வாக்கு வித்தியாசத்துடன் வெற்றி பெற்றுள்ளது.

அதிலும் ரஜினியின் ஆதரவை தனிப்பட்ட முறையில் பெற்றதாக கூறப்படும் தர்மபுரி, பாண்டிச்சேரி பாஜக வேட்பாளர்களுக்குபெரும் தோல்வி கிடைத்துள்ளது, பாமகவினரிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில் நேற்று வரை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் வீட்டில் நடந்த ரஜினியின் ஜக்குபாய் கதை விவாதம் திடீரெனநிறுத்தப்பட்டுவிட்டது. இன்று ரஜின் ஹைதராபாத் செல்கிறார்.

கதை விவாதம் நிறுத்தப்பட்டுவிட்டதால் ரவிக்குமாரும் நாளை குடும்பத்துடன் மலேசியா, சிங்கப்பூருக்கு டூர் கிளம்புகிறார்.

இதனால் இந்தப் படத் தயாரிப்புப் பணிகள் இப்போதைக்கு நிறுத்தப்படுகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X