ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காளகஸ்தியில் உள்ள புகழ் பெற்ற சிவன் கோவிலின் ஆஸ்தான பாடகராகபிரபல திரைப்பட பின்னணி பாடகி பி.சுசிலா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த கோவிலில் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தன. கடைசி நாளான பல்லக்குசேவை நிகழ்ச்சியின் போது, கோவில் நிர்வாகிகள் பி.சுசிலாவை ஆஸ்தான பாடகியாக நியமிப்பதாக அறிவித்தனர்.
பின்னர் பி.சுசிலா பேசும்போது, இந்த நாளை என் வாழ்நாளின் பொன்னாளாக நினைக்கிறேன். தெய்வநிகழ்ச்சிகளுக்கும், கோவில் வளர்ச்சிக்கும் என்னால் முடிந்த சேவை செய்வேன் என்றார்.