ராகிங்: மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் 18 பேர் டிஸ்மிஸ்
மதுரை:
ராகிங்கில் ஈடுபட்டு ஜூனியர் மாணவர்களை சித்திரவதை செய்த மதுரை சட்டக் கல்லூரியைச் சேர்ந்த 18மாணவர்கள் கல்லூரியில் இருந்து நிரந்தமாக நீக்கப்பட்டுள்ளனர்.
மதுரை சட்டக் கல்லூயில் புதிதாக சேர்ந்த ஜெயகார்த்திக், கண்ணபிரான், தனுஷ்கோடி ஆகிய 3 மாணவர்களை,சீனியர் மாணவர்கள் சிலர் ராகிங் செய்துள்ளனர். இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் மூன்று பேரும் புகார்செய்துள்ளனர்.
இதை அறிந்த சீனியர் மாணவர்கள் ஆத்திரமடைந்து, 3 மாணவர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.கத்தியாலும் குத்தி சித்திரவதை செய்தனர்.
இதில் காயமடைந்த 3 பேரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாகதல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.
ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து கல்லூரி முதல்வர் விசாரணை நடத்தினார்.
இதன் இறுதியில் ராஜமோகன், ராஜேஷ், பொன்னுக்கிளி, அன்பழகன், அண்ணாதுரை, மகேந்திரபாண்டியன்,காசிமாயன், சஞ்சய் காந்தி, சிவராமன், சண்முகராஜா, கந்தசாமி, மூவேந்தன், செல்வக்குமரன், இளங்குமரன்,ஆரோக்கிய செல்வரமேஷ், தனுஷ்கோடி, இளையராஜா, அசோக் குமார் ஆகிய 18 மாணவர்களும் கல்லூரியைவிட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
இதுதொடர்பான உத்தரவை சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் பிறப்பித்துள்ளது.